சூடான செய்திகள் 1

நீரில் மூழ்கிய தேரரை காணவில்லை

(UTV|COLOMBO)-யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்த பகுதியில் தேரர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (12)  தேரர் களனி கங்கையில் சில தேரர்களுடன் நீராட சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நிட்டம்புவ, நாபாகொட விகாரையை சேர்ந்த 13 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யட்டியாந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

எதிர்வரும் புதன்கிழமை புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்?

பிராசத் ஹெட்டடியாரச்சி மீண்டும் விளக்க மறியலில்