வணிகம்

மிளகாய் பயிற்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-தேசிய சந்தையில் பச்சைமிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க, பயிற்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2018/19 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்தின்போது 15,000 ஹெக்டேயரில் பச்சைமிளகாய் செய்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் பச்சைமிளகாய்க்கு அதிக கேள்வி நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் பச்சைமிளகாயின் விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்

தொடர்ந்தும் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானம்

சத்தோசவில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியில் சிக்கல் இல்லை – அமைச்சு