சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித முடிவும் இன்றி நிறைவு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பரிந்துரை தொடர்பில் கடுமையான முரண்பாட்டு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனால் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்றைய தினம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலை பாராளுமன்றம் காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

 

 

 

Related posts

கொழும்பு வாழைத்தோட்டத்தின் ஓரு பகுதி மூடப்பட்டது [PHOTOS]

கண்டி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு