வணிகம்

இறக்குமதியை கட்டுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

(UTV|COLOMBO)-இறக்குமதியைக் கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

உலக சந்தையில் தற்போது உருவாகியுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நிகழ்காலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார சபை நேற்று  கூடிய போது, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக மட்டுப்படுத்தி, தேசிய ரீதியில் உற்பத்தியை ஊக்குவிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்