கேளிக்கை

பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சித்த பிரபல நடிகை

(UTV|INDIA)-தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, மற்றும் சிம்பு நடித்த ‘குத்து’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் முன்னாள் எம்பியுமான ரம்யா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து அவர் மீது தேசியத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ரம்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதை அடுத்து அவர் மீது உபி மாநிலத்தை வழக்கறிஞர் ஒருவர் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளார்.

அந்த வழக்கறிஞர் தனது புகாரில் ரம்யாவிடம் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய புகாரை நீக்கும்படி தான் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

என்னால ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் பேச முடியும்

(VIDEO)-ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மார்வெல் Anthem வெளியானது…

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி காலமானார்