வகைப்படுத்தப்படாத

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

(UTV|INDIA)-திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி சென்னை, காவேரி மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை, மாலை காலமானார்.

1924 ஜூன் 3-ஆம் திகதி , நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்தார்.

சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார். அதனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக 2017இல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்துள்ளர்.

1969 ஜூலை 27 ஆம் திகதி திமுக தலைவராக பதவியேற்றுக்கொண்டார் கருணாநிதி. கடந்த ஜூலை 27 அன்று அப்பதவியில் 49 ஆண்டுகளை நிறைவு செய்து 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

அரசியலில் மட்டுமல்லாது திரைத் துறையிலும் வெற்றிகரமான கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் கருணாநிதி விளங்கினார்.

தன் வரலாற்றை ஐந்து தொகுதிகளாக “நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கருணாநிதி, பல உரைநடை மற்றும் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசன கர்த்தா, பட தயாரிப்பாளர், திரைப்பட பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், முதலமைச்சர் என பன்முகம் கொண்ட அரசியல் தலைவர் கருணாநிதி தனது 95 ஆவது வயதில் உலகை விட்டும் பிரிந்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ

රාගම ඇතුළු ප්‍රදේශ කිහිපයක අද ජල කප්පාදුවක්

Sri Lankan Contingent’s Phase 6 group leaves for UN Missions [UPDATE]