உள்நாடு

8 பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

(UTV | கொழும்பு) –

முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1,586 குடும்பங்களைச் சேர்ந்த 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாடசாலை மாணவர்களின பாடசாலைக்கு வருகைதரும் வீதம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1,039 பேர் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரணைதீவில் சடலங்கள் அடக்கம் : இனமுறுகலை ஏற்படுத்தும் அரசின் நாடகம் [VIDEO]

நாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]

உலக பாரம்பரிய நக்கிள்ஸ் விளிம்பில் ஒரு ஹோட்டல் வளாகம்