சூடான செய்திகள் 1

கல்வீச்சு தாக்குதலில் ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் காயம்

(UTV|COLOMBO)-கல்வி அமைச்சிற்கு முன்னால் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசார் தொழிற்சங்கத்தினர் பேரணியாக வந்து கல்வி அமைச்சிற்கு முன்னால் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது , அவர்களுக்கும் புதிதாக நியமனங்களை பெற்ற தரப்பிருக்கும் இடையில் தீவிரநிலை ஏற்பட்டது.

அச் சந்தர்ப்பத்திலேயே இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மீது இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி

மஹனாம மற்றும் திசாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்