சூடான செய்திகள் 1

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

(UTV|COLOMBO)-வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி ஒரு மாதத்தில் 700 விண்ணப்பதாரிகள் விண்ணப்பிப்பதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 2017 ஆம் ஆண்டில் 12,000 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கோரி வருகின்ற விண்ணப்பங்கள் விசேட குழுவினூடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது