சூடான செய்திகள் 1

ஓரின சேர்க்கையால் ஏற்பட்டுள்ள மோதல்

(UTV|COLOMBO)-மாத்தளை நகரில் விடுதியொன்றின் அறையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மற்றும் இரத்திபுரி பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்களில் ஒருவரின் தொலைபேசிக்கு வந்த குறுந்தகவல் ஒன்றின் ஊடாக நண்பர்கள் ஆகியுள்ளனர்.

பின்னர் தொலைபேசி ஊடாக உரையாடி நட்பை தொடர்ந்துள்ள இவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இவ்வாறு பழகிவந்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இருவரும் மாத்தளை நகரில் உள்ள பிரதான விற்பனை நிலையமொன்றில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களில் ஒருவர் பணியில் இருந்து விலகி வெளிநாடு செல்லவதாக கூறிய நிலையில் மற்றைய இளைஞர் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் இறுதியாக உரையாட வேண்டும் எனக் கோரி கோபத்திற்கு உள்ளாகிய இளைஞன், தனது நண்பனை அழைத்துள்ளார்.

இதற்கமைய இருவரும் மாத்தளை நகரில் விடுதியொன்றின் அறையில் சந்தித்துள்ளனர்.

வெளிநாடு செல்லும் தீர்மானம் தொடர்பில் இதன்போது இருவருக்கு இடையே வாய்த்தகராறு அதிகரித்துள்ள நிலையில், இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவர்களில் ஒருவரது பையில் இருந்து விஷ போத்தலும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய சந்தேக நபர் மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை

ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் – இன்று முதல் ஆரம்பம்