சூடான செய்திகள் 1

ஐ.கே. மஹானாம மற்றும் பி. திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை  – பி.ஹெரிசன்

கொரோனா வைரஸ் – இலங்கையில் 87 பேர் அடையாளம்

மாத்தறை யாசகரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி (video)