சூடான செய்திகள் 1

24 மணி நேர நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-சூரியவெ மற்றும் மத்தல பிரதேசங்களில் 24 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (02) மாலை 6 மணி முதல் நாளை (03) மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெதிவெவ, கடவர வடக்கு, கடவர தெற்கு, வல்சபூகல, தலவில்ல, புருனகந்த, மஹபார, பத்கிரிய, பஹல மத்தல, மத்தல, கடன்வெவ, கொன்னேறுவ மற்றும் நகரவெவ ஆகிய பகுதிகளுக்கே இந்த 24 மணித்தியாள நீர்வெட்டு இவ்வாறு அமுலில் இருக்கும்.

சூரியவெவ, மகாவலி மற்றும் கல்வெவ நீர் விநியோக குழாய்களுக்கிடையில் புதிய நீர்பாசன குழாய் ஒன்று இணைக்கப்பட உள்ளமையாலேயே இந்த நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை மறுதினம் சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு…

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்