சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை அமுலாக்குகின்றனர்.

 

பிரதான நகரங்கள் சார்ந்த பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு மாநகரில் 11 வெசாக் அலங்கார பந்தல்களும்இ ஐந்து வலயங்களும் அமைக்கப்படவுள்ளன. இவற்றை பார்வையிட வரும் மக்களின் நலன்கருதி சீருடையிலும்இ சிவில் உடையிலும் ஆயிரத்து 900 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஆயிரத்து 100 பேர் பணியாற்றுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் திட்டம் பொது மக்களின் பாவனைக்கு