சூடான செய்திகள் 1

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.இதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வௌியாகியுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

O/L, A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு வெளியானது !

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு