சூடான செய்திகள் 1

புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு

(UTV|PUTTALAM)-புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்புநிலவும் சீரற்ற வானிலையால் புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு ஆண்டிமுனை செல்வபுரம் மற்றும் பாரிபாடு ஆகிய கடற்கரையோரம் நாளுக்கு நாள் கடலரிப்புக்குள்ளாகி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பு காரணமாக தாங்கள் அமைத்து வைத்துள்ள மீன் வாடிகள் மற்றும் வீடுகள் நாளுக்கு நாள் கடலரிப்பு காரணமாக அழிந்து வருவதாகவும்.அத்துடன் இயந்திரப் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைக்க முடியவில்லை எனவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இந்த கடலரிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெறும் தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைவு!

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்