சூடான செய்திகள் 1

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

(UTV|COLOMBO)-சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மே 7 ஆம் திகதியை அரச மற்றும் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இம்முறை சர்வதேசதொழிலாளர் தினத்தை பிற்போடுமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சர்வதேச தொழிலாளர் தினத்தை 7 ஆம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு