சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!!!!

(UTV|COLOMBO)-தேர்தல் காலத்தில் அமைச்சர் ஹக்கீம் பங்குபற்றிய அனைத்து தேர்தல்  பிரசார மேடைகளிலும் அவர் பேசியது மக்கள் நலன் பற்றியோ அபிவிருத்தி பற்றியோ பேச வில்லை அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் அவர் தலைமைத்துவம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும் தான்…. இவரின் இவ்வாறான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

எந்த கட்சியை கிழக்கு மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற வெறியோடு இந்த உள்ளுராட்சி சபை தேர்தலை ஹக்கீமின்  தலைமையிலான அணியினர் பயன்படுத்தினார்களோ அந்த தேர்தல் அவர்களுக்கே  ஆப்பாக அமைந்துவிட்டது   என்றுதான் சொல்லவேண்டும்.அமைச்சர் ஹாக்கீமின்  பாஷையில் சொல்வதாக இருந்தல்  முஸ்லீம் காங்கிரசுக்கு ஆப்பிளத்த குரங்கின் கதைபோல் அமைந்துவிட்டது ….
கிழக்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சி கிழக்கில் சபைகளை அமைக்க ஆரம்பித்தவுடன் துக்கத்தில் இருந்த ஹக்கீம் என்னசெய்வது என்று அறியாமல் ஓட ஆரம்பித்தார் ஆட்சி பீட தலைவர்களுடன் பேச ஆரம்பித்தார் ஹக்கீமின் பேச்சும் ஓட்டமும்   எடுபடவில்லை தனது தோல்வியை வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைச்சர் றிஷாட்  பதியுதீனை விமர்சனம் செய்ய இடம் தேடினார் அந்த நேரத்தில் கிடைத்த மேடைதான் புத்தளம் என்ன பேசினார் யாரை விமர்ச்சித்தார் ஹக்கீம் என்று எல்லோருக்கும் தெரியும் இதுதான் ஹக்கீமின் நிலை இன்று
ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிக்கிறார் பிரதமர் சரியில்லை என்கிறார்  அம்பாறையில் யானை கட்சியில் தான் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார் மக்களை ஏமாற்ற வெளியில் விமர்சன அரசியல் அதேபோல் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையை இல்லாமல் செய்ய கருப்பு பணம்  ஊழல் என பேசும் ஹக்கீம் மட்டும் என்ன உத்தம மனிதரா??? இந்த கேள்விக்கு நீங்கள் தான் பதில் தரவேண்டும்……
இந்த தேர்தல் முடிவில் எமது கட்சிதான் சபை அமைக்கும் என்கிறார் இப்போது நடக்கும் நிலையை கண்டதும் என்ன பேசுவது என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் அமைச்சர் ஹக்கீம்..
 மக்களே இவரின் விமர்சன அரசியலும் வீராப்பு பேச்சும் எப்போது முடிவுக்கு வரும்…
ஏ.எம்.றிசாத்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !