வகைப்படுத்தப்படாத

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தெரிவு

(UTV|COLOMBO)-சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷை தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 3 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

இதன் பிரகாரம் இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

நாளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இது சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டியாக அமையவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

පුජිතට සහ හිටපු ආරක්‍ෂක ලේකම්ට ඇප

கலிபோர்னியாவில் படகில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது