வகைப்படுத்தப்படாத

யொவுன்புர இளையோர் முகாம்

(UTV|COLOMBO)-தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய இளையோர் கழக சம்மேளனமும் இணைந்து வருடாந்தம் நடத்தும் யொவுன்புர இளையோர் முகாமை இம்முறை குருநாகல் மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளது.

மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்பிரல் 2ஆம் திகதி வரை நடைபெறும் இந்த இளையோர் முகாமின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள்.
கலாசாரப் போட்டிகள், விளையாட்டு, இன நல்லுறவை விருத்தி செய்யும் நிகழ்ச்சிகள், வெளிநாட்டு இளைஞர் யுவதிகளின் பங்கேற்பு என்பன இதன் சிறப்பம்சங்களாகும். இளையோர் பாராளுமன்றத்தின் விசேட அமர்வொன்றும்  அங்கு இடம்பெறும். இம்முறை இளையோர் முகாமில் 20 ஆயிரத்திற்கும் 25 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கேற்கவுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

බුදුපුත් සුරක්ෂා හිමිකම් පත්‍ර ප්‍රදානය කිරීමේ වයඹ පළාත් මහෝත්සවය අද (13)