சூடான செய்திகள் 1

48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் புகையிரத சேவை

(UTV|COLOMBO)-ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில்வே கட்டுப்பாட்டளர்கள், ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கண்காணிப்பு மேலாளர்கள் ஆகியோர் எதிர்வரும் 26ம் திகதி இரவு முதல் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இன்று(11) காலை கூடிய ரயில்வே இயக்குநர்களின் தொழிற்சங்க கூட்டணியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளதாக, ரயில்வே லொகோமோடிவ் இன்ஜினியர்களது சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட எம்.பீ. 1 மற்றும் 2 சம்பள அளவினை வழங்குதல் தாமதம் தொடர்பிலேயே எதிர்ப்பினை தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

Related posts

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை!