வகைப்படுத்தப்படாத

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், கடுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வாரியபொல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கையின் போது குறித்த சிற்றூர்து கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று, வாரியபொல நீதவான் நீதிமன்றில் முன்னிநிலை செய்யப்படவுள்ளனர்

Related posts

பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து