வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிசின்னம் பலமான வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது.

குறித்த  இராணுவ வெற்றியை குறிக்கும் நினைவிடம் அவ்விடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டு பலமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

17 வருட பணிக்குப் பின்னர் இலங்கையில் எதிர்ப்புத் தடை விதிகள் அமுலாகியது

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்