உள்நாடுபிராந்தியம்

25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் கடலில் மூழ்கி பலி

பெந்தோட்டை,பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​அந்தப் பெண் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அந்த பெண்ணை அருகிலுள்ளவர்கள் மீட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர் 25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை

திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை வினைதிறனாக முன்னெடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இன்று 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு