உள்நாடு

அறுகம்பை பகுதியில் சோதனை நடவடிக்கை

பொலிஸ், விசேட அதிரடிப்படை, கடற்படை, இராணுவம் மற்றும் அரச புலனாய்வு சேவைகள் பொத்துவில், அருகம்பை விரிகுடாவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம்பை விரிகுடா பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் பயண ஆலோசனையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ,

அலைச்சறுக்கு (Surfing) பொழுதுபோக்கு செயற்பாடுகள் ஈடுப்பட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் அறுகம்பை மற்றும் பொத்துவில் மிகவும் விருப்பமான விடுமுறை இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம்பை விரிகுடாவிற்கு வருகை தந்துள்ளனர், இதன் விளைவாக அப்பகுதியில் ஒரு கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இப்பகுதி தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் அதிக மக்கள் தொகை கொண்டதாக இருப்பதால், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சமீப காலங்களில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

பூர்வாங்க நடவடிக்கையாக பொலிஸார் ஏற்கனவே வீதித் தடைகளை அமைத்துள்ளதாகவும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வழமையான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பயண ஆலோசனையை வழங்கியதை அடுத்து, அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் மோதலால் இஸ்ரேலியர்கள் மீது விரோதம் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காகவே, “சினகொக்” பகுதியில் பொலிஸார் மற்றும் பிரதான வீதிகளில் STF படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

கரையோர ரயில் சேவையில் மாற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை