அரசியல்உள்நாடு

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் – முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஓய்வு பெறுவது தொடர்பில் தமக்கு எந்த விதமான ஐயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் ஓய்வு பெற விரும்பினாலும், தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தம்முடன் இருந்தவர்கள் மீது பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன்.

தனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களை கைவிடுவது கடினமான முடிவாக இருக்கும் என்றார்.

“நான் ஓய்வு பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், 35 வருடங்களாக இவர்களுடன் அரசியல் செய்து வருவதால், இவர்களை விட்டுச் செல்ல முடியாது.

நான் அவர்களை விட்டு விலகலாமா வேண்டாமா என்பதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை. எனவே, இது வெற்றி அல்லது தோல்வி பற்றியது அல்ல, ” என்று அவர் கூறினார்.

பல்வேறு தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகு மீண்டும் போட்டியிடுவது என்று ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது

Related posts

இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

இசுறுபாய கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்