அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையமாட்டோம் – மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஏற்படுத்த போகும் மாபெரும் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணையாது என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் உயர்பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுவதால், அடிமட்ட அளவில் திட்டங்களை வகுத்து, கட்சி மீண்டும் வலுவான நிலைக்கு கொண்டுவரும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மக்கள் காங்கிரஸின் செயலாளர்- YLS ஹமீட் காலமானார்!

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது