அரசியல்உள்நாடு

சஜித்தை வெல்ல வைப்பது தொடர்பில் ஹரீஸ் எம்.பி தலைமையில் நற்பிட்டிமுனையில் கூட்டம்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தேர்தல் குழுக்களின் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழு வின் செயலாளருமான A.C.சமால்தீன், உச்ச பீட உறுப்பினரும், நற்பிட்டிமுனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான யூ.எல்.தௌபிக், நற்பிட்டிமுனை மத்திய குழு செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜஹ்பர், நற்பிட்டிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள 05 கிராம சேவகர் பிரிவுகளுக்கான கட்சி கிளைகள் தலைவர்கள், செயலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

இதன்போது நற்பிட்டிமுனை பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து 03 கூட்டங்களை நடத்துதல் தொடர்பிலும், தேர்தல் காரியாலயங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்தல் சம்பந்தமாகவும், 5 கிராம் சேவகர் பிரிவுகளில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் பற்றியும் எதிர்வரும் 14/09/2024 ல் கல்முனையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களை ஆதரித்து நடைபெற உள்ள கூட்டத்துக்கு அதிகமான மக்களை வரவழைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை கல்முனை தொகுதியில் முன்னெடுப்பதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

இலங்கை தேசிய கொடி விவகாரத்தில் சீனா

இலங்கையில் இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு