உள்நாடு

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.

கல்வி சீர்திருத்த முன்மொழிவு தொடர்பில் பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை 2025ஆம் ஆண்டின் முதல் தவணையில் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் மாணவர்கள் 17 வயதிற்குள் பாடசாலையை முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மதிப்பீடுகளுக்கு புள்ளிகளையும் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், கல்வி பொதுத்தராதர சாதாரண தர தேர்விற்கான பாடங்களை 9 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்