அரசியல்

ஜனாதிபதியினால் புதிய சட்டமா அதிபர் நியமனம்.

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) நியமித்துள்ளார்.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய  அவர், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர்
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்கவின் புதல்வராவார்.

Related posts

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள்

editor

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor

மின் கட்டணத் திருத்தத்துடன் நீர் கட்டணமும் திருத்தப்படும்.