அரசியல்

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

விஜயத்தின்போது இன்று இடம்பெறும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவர், அதனைத் தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளிலும், அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழாவிலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் – தோழராக இருக்கும் எனது அருமை அவருக்குப் புரியும் – அநுர

editor

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன் – ஜனாதிபதி ரணில்

editor