உள்நாடுகல்வி

A/L மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்! அரசின் அறிவிப்பு

2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025   உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும்   மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத வருமானம் 100,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த, அரசுப் பள்ளியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடத்துடன் உயர்கல்வி கற்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளியின் மூலம் மே 22 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் குறைந்தபட்சம் ஒவ்வொரு கல்வி வலயங்களிலிருந்தும் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

Related posts

பழுதடைந்த ரயில் என்ஜின்கள் – வண்டிகள் பற்றி அறிக்கையிட கோரிக்கை

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல்

‘நெதுன்கமுவ ராஜா’ உயிரிழந்தது