உள்நாடு

நள்ளிரவு எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் திருத்தமானது இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 371 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், டீசல் லீற்றர் ஒன்று 363 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kesari

Related posts

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

editor

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்