உள்நாடு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே, வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

Related posts

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து.

அஹ்னாஃப் இனை விடுவிக்குமாறு மனித உரிமை குழுக்கள் இலங்கைக்கு வலியுறுத்தல்