உள்நாடு

பொலிஸ் அதிகாரிக்கு அவசர அழைப்பு- கஞ்சிபானை இம்ரான்!

பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் வர்த்தகரும் என கருதப்படும் கஞ்சிபானை இம்ரானுக்கும், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று ‘அட தெரண’வுக்குக் கிடைத்துள்ளது.

யுக்திய நடவடிக்கையின் கீழ் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்வது தொடர்பில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

அங்கு காஞ்சிபானை இம்ரான், தனது தந்தையையும் மூத்த சகோதரனையும் கைது செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் வழங்கிய பொலிஸ் அதிகாரி, தந்தையை கைது செய்ய மாட்டோம் ஆனால் சகோதரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பிணையில் விடுவித்து தருகிறேன் என கூறியுள்ளார்.

 

 

Related posts

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று