உள்நாடு

ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று…

(UTV | கொழும்பு) –    ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 புனித ரஜப் 29ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை மாலை மஃரிபின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாடு இன்ஷா அல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுத் தலைவர் அல் கலீபத் அல் ஷாதுலீ மௌலவி எம்.பி.எம். ஹிஷாம் (அல் பத்தாஹி) அவர்களின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறை குழு மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறும்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சகல தரப்பினரதும் இறுதித் தீர்மானம் இன்ஷா அல்லாஹ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உத்தியோகபூர்வமாக மாநாட்டு தலைவரினால் அறிவிக்கப்படும்.

தலைபிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்கள் தயவுடன் வேண்டப்படுகின்றனர்.

பிறை சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு 011 2432110, 011 2451245, 0777 353 789 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்புகொள்ளலாம்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

கொரோனா வைரஸ்; மேலும் இருவர் வைத்தியசாலையில்

கப்ரால் பதவி விலகக் கோரவில்லை : PMD