உள்நாடு

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி , 9 பேர் காயம்

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன் எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.        

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு

ஜனாதிபதி ஊடாக மக்களுக்கு விரைவில் நிவாரணம்

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி