உலகம்

பாக்கிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

(UTV | கொழும்பு) –

பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அமைப்பொன்றின் தளத்தினை இலக்குவைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இரு சிறுவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெய்ஸ் அல் அடில் என்ற இஸ்லாமிய குழுவொன்றின் தளத்தினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. பலோச்சிஸ்தான் எல்லையிலுள்ள கிராமம் ஒன்றே தாக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலை சட்டவிரோதமான நடவடிக்கை என வர்ணித்துள்ள பாக்கிஸ்தான் மோசமான விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது. ஒரு சிலநாட்களிற்குள் ஈரான் சிரியா ஈராக் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி