உள்நாடு

இலங்கையில் கடனில் உணவு உண்ணும் 6 இலட்சம் குடும்பங்கள்!

(UTV | கொழும்பு) –

நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முன்னூறு குடும்பங்களில் அறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதன்படி மொத்தக் கடன் பட்ட குடும்பங்களில் உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 வீதமாக உள்ளனர்.
69,7800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளியாக உள்ள நிலையில் இரு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து இருநூறு பேர் அடங்குவதாகவும் பேராசிரியர் கூறினார். இதேவேளை, கடனை மீளச் செலுத்துவதற்காக ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும். தெரிவித்தார்.

53,200 குடும்பங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022க்குப் பின்னர்) 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகளில் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 என்று அவர் கூறினார்.

இது தவிர வங்கிகளில் 97000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 272250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

மேலும் ஒருவருக்கு கொரோனா?