உலகம்

அமைச்சருக்கு சிறை தண்டனை வழங்கிய இந்திய நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) –

சென்னை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மற்றும் 3 வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ள நிலையில்.. அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்று பொன்முடி வழக்கில் 3 வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பொன்முடி வழக்கு ஆளும் திமுகவை கிட்டத்தட்ட புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் திமுகவில் முதல்முறையாக ஆட்சியில் இருக்கும் போது சிறை செல்லும் அமைச்சர் இவர்தான். அதேபோல் திமுகவில் ஒருவர் குற்றம் செய்ததாக தண்டிக்கப்படுவதும் இதுதான் முதல் முறை.

மேல்முறையீடு: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு மற்றும் தண்டனை வழங்கப்பட்டு உள்ள நிலையில்.. அவர் மேல்முறையீடு செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை இருந்தது. நேற்று முதல்நாள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இன்றுதான் தண்டனை அறிவிக்கப்பட்டது. இன்றோடு கோர்ட் விடுமுறை. புத்தாண்டு வரை கோர்ட் விடுமுறை உள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் தீ வைப்பு!

மர்ம நபரின் கத்தி குத்தால் அயர்லாந்தில் கலவரம்!

இந்திய – சீன எல்லை மோதல் – இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி