உள்நாடு

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அனுமதி!

(UTV | கொழும்பு) –

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நியமனம் 29.11.2023 முதல் 03 மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய சி.டி விக்ரமரத்ன கடந்த 25ஆம் திகதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கியதுடன், அந்த காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 3 மாத சேவை நீடிப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீட்டிப்பு அக்டோபர் 13 அன்று சி.டி. திரு.விக்கிரமரத்னவிற்கு வழங்கப்பட்டது, நான்காவது சேவை நீடிப்பு வழங்கப்பட்டது, இது நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை அமுலுக்கு வந்தது.இருப்பினும், சி.டி விக்ரமரத்னவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்க மறுத்த பின்னணியில் அவருக்கு சேவை நீடிப்பு இருந்தது. இதேவேளை, பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்புச் சபைக்கு அறிவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கும்  ஆசிரியர் சங்கம்

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தை இலங்கை நாடுகிறது

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து சஜித் கேள்வி