உள்நாடு

டயனா, சுஜித், ரோஹன பாராளுமன்றம் வர தற்காலிக தடை!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இது தொடர்பான தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான் எம்.பி

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ? தௌபிக் MP அதிரடி அறிவிப்பு.

நாட்டின் பல பகுதிகளில் மழை