உள்நாடு

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்த மௌனம்!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலார்கள் கருத்துக் கேட்டபோதே உடனடியாக எப்படிக் கருத்துக்கூறுவது எனக்கூறி மறுத்து விட்டார்.

இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, ” நான் வரவு – செலவுத்திட்ட அறிக்கையை முழுமையாக இன்னும் படிக்கவில்லை. அதனால் உடனடியாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்துக் கூற முடியும்? இது தொடர்பாக நன்கு அறிந்தவர்களிடம் கேளுங்கள். நான் படித்த பின்னர் கூறுகின்றேன். அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நல்ல விடயம் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு