உள்நாடு

5 ஆம் தர புலமைப்பரிசில் — மேலதிக வகுப்புகளுக்கு தடை.

(UTV | கொழும்பு) –

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை இன்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வானிலை : ஒரு குறைந்த அழுத்தம் விருத்தியடையும் சாத்தியம்

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு