உள்நாடு

டீசல் கொள்வனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் நான்கு  மாதகாலத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023.11.01 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்துவரும் நான்கு  மாதகாலத்திற்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய M/s Petrochina International (Singapore) Pte. Ltd. இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு