உள்நாடுமருத்துவம்

நிபா வைரஸ் பரிசோதனை குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்துடன், நிபா வைரஸ் தொடர்பாக இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், இன்று அமைச்சரவை கூட்டத்தின் போது அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளுக்கான வரி நீக்கம்

கடற்படை உறுப்பினர்களில் 679 பேர் குணமடைந்தனர்

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்