உள்நாடு

டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – பவித்திரா வன்னியராச்சி.

(UTV | கொழும்பு) –

மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தொடர்களில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், காணிகள், விவசாய நிலங்கள் என மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை அடுத்து இதற்கு பதில் வழங்கிய விடையதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, டிசம்பருக்குள் மக்கள் கோரிய காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நுரைச்சோலையில் பழுதடைந்த ஜெனரேட்டர் திங்கள் முதல் வழமைக்கு

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

வாக்குப்பெட்டி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

editor