உள்நாடு

கண்டி நகர பாடசாலைகளுக்கு விடுமுறை !

(UTV | கொழும்பு) –    ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரவை முன்னிட்டு கண்டி நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன் படி, மத்திய மாகாண ஆளுநர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரவிற்கான போக்குவரத்து நெரிசல் காரணமாக கண்டி நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஆகஸ்ட் 28, 29 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30ஆம் திகதி பூரணை தினம் என்பதால் அன்றைய தினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை!