உலகம்வகைப்படுத்தப்படாத

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் கொள்ளைகள் துப்பாக்கியை பயன்படுத்திய கொலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து திட்டமிட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள தேசபந்து தென்னக்கோன் அடுத்த ஆறுமாதங்களில் பாதளஉலக கும்பல்களை முற்றாக ஒழிக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கவலை தரும்விதத்தில் அதிகளவு துப்பாக்கி பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாலும் அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெறுவதாலும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்;கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வருடம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் நேற்று மன்னார் அடம்பனில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் 46- 53 வயதுடைய இருவரும் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இவர்கள் இலக்குவைக்கப்பட்டனர்.

முன்னதாக போதைப்பொருள் மற்றும் பாதளஉலக குற்றங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தேசபந்துதென்னகோன் தiலைமையில் பொலிஸ்மாஅதிபர் குழுவொன்றை நியமித்திருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

இந்த குழுவினர் பாதளஉலக குழுவினர் அவர்களின் சகாக்களின் விபரங்கள் குறித்த விபரங்களை திரட்டியுள்ளனர்.

சில குற்றவாளிகள் சிறைகளுக்குள் இருந்தவாறே தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

இந்த நிலையில் விசேட நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பமாகும்.

Related posts

பொசொன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்

14 ஆண்டு பிரதமராக இருந்தவர் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.