உள்நாடுவிளையாட்டு

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!

(UTV | கொழும்பு) –

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான நேற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நான்காவது நாள் ஆட்டம் நிறைவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில்,  போட்டியின் இறுதி நாளான இன்று ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.   பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் ஹுல் ஹக் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.   அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

VIDEO:

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை