உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டபாயவுக்கு வேட்பாளர் என்ற போது எதிர்த்து நின்ற நபர்!

(UTV | கொழும்பு) –

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  பசில் ராஜபக்சவிடம் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானம் சிறந்ததாக அமையுமா என குறிப்பிட்டு எதிர்ப்பு வெளியிட்டேன் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற  பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலநது கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பாரிய போராட்டத்துக்கு பின்னர் மீண்டெழுந்துள்ளோம். உரப் பற்றாக்குறை மற்றும் விவசாயத்துறை வீழ்ச்சிக்கு பின்னரே அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதுவே உண்மை. தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயத்துறை வீழ்ச்சி இயற்கை காரணிகளால் ஒன்றும் ஏற்படவில்லை. சேதன பசளை திட்டத்தை ஒரே கட்டமாக நடைமுறைப்படுத்தியதால்  விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் நாளடைவில் பாரிய மக்கள் போராட்டமாக எழுச்சிப் பெற்றது.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானம் சிறந்ததாக அமையுமா என குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தேன். கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் அவர் ஜனாதிபதி வேட்பாளர் என தற்போது எமக்கு எதிராக அரசியல் செய்யும் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோர் மக்கள் மத்தியில் குறிப்பிட்டு மக்களை ஒன்றுத்திரட்டினார்கள். இவ்வாறான நிலையில் கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு அப்போதைய எதிர்க்கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களமிறக்க வேண்டியிருக்கும்.

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எழுந்த சவால்களை வெற்றிக் கொள்ள எமது அரசாங்கம் தோல்வியடைந்ததன் போராட்டம் தீவிரமடைந்தது. அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பு

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்